top of page

இழந்தது இயன்றது!

  • Writer: Sridhana
    Sridhana
  • Aug 27, 2020
  • 1 min read

Updated: Aug 30, 2020


கொரோனா நாட்களில் ITல் இழந்தது... மனதளவில் இயன்றது!


படித்தகல்விக்கேற்ற வேலை,

வேலைக்கேற்ற ஊதியம்,

ஊதியத்திற்கேற்ற - சேவையும் செலவும் !

மண்டையோட்டுக்குள் ஆயிரம்

பிரச்சனைகள் கொட்டிக்கொண்டே இருந்தாலும்,

சகஊழியரின் கேலிக்கும்மாளத்தில்

பிரச்சனைகள் எல்லாம் கோமாவிற்குச் செல்லும்!

மனையில் இருந்து கிளம்பியதும்,

மனைத்தொல்லை இனியில்லை

என்றுக் குதிப்பதும்...

சிலநண்பர்கள் - வண்ணப்பட்டாம்பூச்சியின் வடிவங்களை

ரசிக்கும் அசட்டுஅழகும் மங்கியது

சிலநாட்களாக!

நாம் மட்டும் பணியிடத்தை இழக்கவில்லை,

தவறேதும் செய்தால்,

வாழைப்பழத்தில் கோனூசி ஏத்தும் வார்த்தைகளும்

வஞ்சப்புகழ்ச்சி வார்த்தைகளும்

நம்மை இழக்கிறது !

மனையில் இருக்கையில்

உறங்கிக்கொண்டே இருக்கும்

உணவுப்பை,

பணிமனையில் மட்டும்

சிறுகுடல் பெருங்குடலோடு சண்டையிட்டு

மூளையைச் சுரண்டிக்கொண்டே

இருக்கும் அதிசயம்

இன்னும் புரியவில்லை எனக்கு !

வடிவாய் செதுக்கும் சிற்பிகளின்

சிற்பத்தில் இருக்கும் பிழையை,

பிழையேதும் மிச்சம்வைக்காமல்

பிழையில்லா சிற்பத்தை வடிவமைப்பதற்குள் வரும்

கலவரம் தான் எத்தனை - அப்பப்பா !

பேச்சும் சிரிப்பும் அலைமோதினாலும்,

கப்பல்

திறம்பட செலுத்தி,

சேரவேண்டிய நேரத்திற்குள்

பழுதில்லாமல் சேர்ந்துவிடும் !

வகுத்திருந்த நேரங்கள் எல்லாம் - நம்மைச்சுற்றி

கோலமாவினால் போட்ட

வட்டம் ஆகியது - நினைத்தபோது அழித்துக்கொள்ள !

தூங்கும் நேரத்தில் கூட

பரதம் ஆடுகிறது மூலை - தகவல் வரும் ஓசைக்கு !

சிலநேரம் மட்டும்

மேசையில் கிடந்த ஒன்று இன்று

நினைத்தபோதெல்லாம் ஏறிக்கொள்கிறது

மடியில் - மடிக்கணினி !


மறந்த விசயங்கள்

எல்லாம்,

ரசித்து பார்க்க வைத்தது...

நாகரிக நாட்கள் பிரித்த

நண்பர்கள் சொந்தங்கள்

எல்லாம்,

நினைவில் வரவழைத்தது

இந்த தீநுண்மி நாட்கள்!

இதுவும் கடந்து போகிறதோ?

இல்லை - வழக்கம்போல்

இதுவும் பழக்கப்போகிறதோ!

மீண்டும் விரைவில் சந்திக்கையில்,

பருமன் மாறினாலும்,

என் அடையாளமாக

என்றும் என்னோடே வாழும்

என் புன்னகை (இளிச்சவாய்),

உங்கள் முகத்திலும்

பூக்க என் வாழ்த்துக்கள் !


-ஶ்ரீதனா

Recent Posts

See All
உருகி ஊற்றுதடி…

மறக்க நினைக்கும் கவலைகளை மண்ணுக்குள் புதைக்கிறாய்... சிரிக்க மறந்த நாட்களை மீண்டும் அழகாய்த் தருகிறாய்... அகவை ஏறினாலும் - இதயத்தை...

 
 
 
நிம்மதியான நிமிடம்

இன்பம் துன்பம் இரண்டிற்கும் இடையே வாழும் நிமிடம் மட்டும்தான் நிம்மதியான நிமிடம்…! உலக மேடையில் உறவுகளின் நாடகத்தில் நாமும் ஒரு பொம்மை...

 
 
 

2 Comments


Sridhana
Sridhana
Aug 30, 2020

😄

Like

kani mozhi
kani mozhi
Aug 30, 2020

Smiling Beauty.. இளிச்சவாய் 😁😁

Like

Subscribe Form

©2020 by Sri Bala - Founder of ChellaTamil - 3K - Tamizh - Kadhai Kavithai Katturai!

bottom of page