top of page

உருகி ஊற்றுதடி…

  • Writer: Sridhana
    Sridhana
  • Oct 19, 2022
  • 1 min read

Updated: Oct 20, 2022

மறக்க நினைக்கும் கவலைகளை

மண்ணுக்குள் புதைக்கிறாய்...

சிரிக்க மறந்த நாட்களை

மீண்டும் அழகாய்த் தருகிறாய்...

அகவை ஏறினாலும் - இதயத்தை

உள்ளங்கைகளால் அள்ளி

துள்ளிக்குதிக்க வைக்கிறாய்...

சிந்தித்து ஒடுங்கிக்கிடக்க ஆயிரமுண்டு

மண்டை ஓட்டுக்குள் - இருந்தும்,

உன்னை நினைத்தாலே

இதழோரமும் இதயத்தோரமும்

சில்லென்று ஒரு சின்னச்சிரிப்பு

என்னைத் தாண்டி எட்டிப்பார்க்கிறது ...


கிறுக்கானேன் நான்,

உன்னோடு பேச நினைத்து

உன்னை ரசிக்க நினைத்து

உன்னைத் தாங்கத்தடுக்க

பார்த்துக்கொள்ள நினைத்து

உன் குரலில் - ம்ம்ம்...

பாடலோ ஏசலோ - கேட்க நினைத்து...

உன் பாசத்தை

கொஞ்சகொஞ்சமாய் அனுபவிக்க நினைத்து..


நினைத்து நினைத்து

உருகி உருகி

உள்ளிருந்து ஊற்றுதடி

என் மொத்த பாசமும்

உனக்காக மட்டும் கொட்டித்தீர்க்க...


என்றும் என் நினைவில் நீ

உன் நிழலாய் நான்...


-ஶ்ரீதனா








Recent Posts

See All
நிம்மதியான நிமிடம்

இன்பம் துன்பம் இரண்டிற்கும் இடையே வாழும் நிமிடம் மட்டும்தான் நிம்மதியான நிமிடம்…! உலக மேடையில் உறவுகளின் நாடகத்தில் நாமும் ஒரு பொம்மை...

 
 
 
வரமா ?

பிடித்தது எல்லாம் கிடைத்தால் பிடித்தவரெல்லாம் அருகிலேயே இருந்தால் அதுதான் வரமோ? இல்லை - பிடித்ததோ பிடித்தவர்களோ ஏங்கி தவித்து உருண்டு...

 
 
 

Comments


Subscribe Form

©2020 by Sri Bala - Founder of ChellaTamil - 3K - Tamizh - Kadhai Kavithai Katturai!

bottom of page