top of page

காலை வணக்கம்

  • Writer: Sridhana
    Sridhana
  • Apr 30, 2020
  • 1 min read

நடந்தவை யாவும்

கனவாக மறையட்டும்...

நடப்பவை யாவும்

படைப்பாய் மலரட்டும் !!!

உடலில் பலமில்லை எனினும்

உள்ளத்தில் உறுதி கொள்...

அது

உயரத்திற்கு செல்ல ஊக்குவிக்கும் ...

உணர்ச்சிகளும் பல கலந்திருக்கும் ... !

அழகானப் பகலவன் -

உன்

ஆற்றல் மிகுந்த

படைப்பிற்காக

காத்திருக்கிறான்...!

சோம்பல் முறித்து..

சோகம் துறத்தி..

உலகில்

சுவாசிக்காத மூச்சுக்காற்றை யோசிக்காமல் சுவாசிக்க

நேசத்தோடு வா...

இந்நாளை உன்னோடு

சேர்ந்து நானும்

வாழ்கிறேன்... !

Recent Posts

See All
உருகி ஊற்றுதடி…

மறக்க நினைக்கும் கவலைகளை மண்ணுக்குள் புதைக்கிறாய்... சிரிக்க மறந்த நாட்களை மீண்டும் அழகாய்த் தருகிறாய்... அகவை ஏறினாலும் - இதயத்தை...

 
 
 
நிம்மதியான நிமிடம்

இன்பம் துன்பம் இரண்டிற்கும் இடையே வாழும் நிமிடம் மட்டும்தான் நிம்மதியான நிமிடம்…! உலக மேடையில் உறவுகளின் நாடகத்தில் நாமும் ஒரு பொம்மை...

 
 
 

Comments


Subscribe Form

©2020 by Sri Bala - Founder of ChellaTamil - 3K - Tamizh - Kadhai Kavithai Katturai!

bottom of page