கருவுற்றிருக்கும் தாய்
- Sridhana

- Apr 30, 2020
- 1 min read
உன் உயிர் உன் இரத்தம் உன் காதலின் அடையாளம் உன் உடலோடு ஒன்றி மலருகிறதோ... நினைத்தாலே மலரும் உன் அழகுமுகம் புன்னகையில் :) பெற்றெடுக்கும் வழியை நினைவில்கொள் - இருக்கும் வலி கடுகைப்போல் தெரியும்... பெற்றெடுக்கும் நொடியில் நினைவில்கொள் - பத்து மாதம் நீ கடந்த பெரிய வலிகள் அனைத்தையும் :-) சேயின் கொஞ்சும் சிரிப்பில், தாயின் நெஞ்சம் மகிழும்...
பிஞ்சு குழந்தையின் நுனி விரல் தீண்டலிலே, பனி போல் மறைந்துவிடும் நீ படும் வலிகள் அனைத்தும்... சுகமான சுமை... சுமையில்லா சுகம்... இரண்டும் உணர்வாய் உன் கரு உன் உருவுக்குள் வளர்கையிலே ! உடலால் நீ சுமந்தாலும் உன்னையும் சேர்த்து சுமக்கும் ஜீவன் ஒன்று !



Comments