top of page

செல்லத்தோழி

  • Writer: Sridhana
    Sridhana
  • Apr 30, 2020
  • 1 min read

நான் வாழ்ந்த நாட்களின் ஏக்கம் தனித்தவள்...

என்னால் சிரித்தவர்கள் பலர்,

என்னைச் சிரிக்க வைத்தவள்...

மனம் நிறைந்து மூச்சினில் கலந்து,

மனம் மகிழ வைத்தவள்...

சுட்டுக் கொல்லும்

கடும் வார்த்தைகள் நான் பேசினாலும் -

மார்போடு என்னைக் கட்டி கொள்ளும் என்னவள்...

இனி வரும் நாட்கள்,

அவள் நினைவில் அவள் அருகினில்

அவள் சிரிப்பினில் அவள் துணையோடு

அவள் உயிருக்குள் வளரும் உயிர்களோடு

அவர்களுக்குத் துணையாக அவள் மனதில் ....

என் உயிரினில் கலந்த என் தோழியோடு

என் தோழியின் நினைவின் ஓரத்தில்

என்றும் நான் வாழ வேண்டும்...!!!


Recent Posts

See All
உருகி ஊற்றுதடி…

மறக்க நினைக்கும் கவலைகளை மண்ணுக்குள் புதைக்கிறாய்... சிரிக்க மறந்த நாட்களை மீண்டும் அழகாய்த் தருகிறாய்... அகவை ஏறினாலும் - இதயத்தை...

 
 
 
நிம்மதியான நிமிடம்

இன்பம் துன்பம் இரண்டிற்கும் இடையே வாழும் நிமிடம் மட்டும்தான் நிம்மதியான நிமிடம்…! உலக மேடையில் உறவுகளின் நாடகத்தில் நாமும் ஒரு பொம்மை...

 
 
 

1 Comment


kani mozhi
kani mozhi
Apr 30, 2020

Superb Thozhiye..

Like

Subscribe Form

©2020 by Sri Bala - Founder of ChellaTamil - 3K - Tamizh - Kadhai Kavithai Katturai!

bottom of page